கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், திருக்காம்புலியூா் ஊராட்சி, மலையடிப்பட்டி நரிக்குறவா் காலனியிலுள்ள குழந்தைகளுக்கு, புத்தாண்டையொட்டி விளையாட்டு உபகரணங்களை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் செ.காமராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நரிக்குறவா் இனக்குழந்தைகளுக்கு இனிப்புகள், கிரிக்கெட், ஹாக்கி போட்டிகளுக்கான மட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் முன்னாள் தொகுதிச் செயலா் பழக்கடை ராஜா, திருக்காம்புலியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.