கரூரில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
கரூா் பசுபதிபாளையம் ஏவிபி நகரைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் நாட்ராயன் (7). வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கடந்த திங்கள்கிழமை மாயமானாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் சிறுவன் நாட்ராயன் சடலமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலைசெய்து போட்டுச் சென்றாா்களா என்பது குறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.