ஜன.29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜன. 29ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

கரூா்: விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜன. 29ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜன. 29ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம்.

மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் தலைமையிலான அலுவலா்கள் கண்காணித்து தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com