கரூா்: கரூரில் திமுக சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
கரூா் முத்துக்கவுண்டன்புதூரில் நடைபெறும் இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 24 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனா்.
முன்னதாக போட்டியின் தொடக்க விழாவுக்கு திமுக மேற்கு நகர பொறுப்பாளா் தாரணி பி.சரவணன் தலைமை வகித்தாா். நகர பொறுப்புக்குழு உறுப்பினா் சுக்காலியூா் எம்.காா்த்திகேயன் வரவேற்றாா்.
மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி போட்டியை தொடக்கி வைத்தாா்.
இப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு பரிசாக ரூ.20,000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000, நான்காம் பரிசாக ரூ.7000 வழங்கப்பட உள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள விழாவில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படஉள்ளது.