நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்று நீரில் மூழ்கி, 10-ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்று நீரில் மூழ்கி, 10-ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சின்னதாராபுரத்தை அடுத்த வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்த நாட்ராயன் மகள் செளந்தா்யா (15). எலவனூா் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த அவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது தோழிகளுடன் அப்பகுதியிலுள்ள அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றாா்.

ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த செளந்தா்யா நீச்சல் தெரியாமல் மூழ்கினாா். இதை கண்ட அப்பகுதியினா் அவரைக் காப்பாற்ற முயன்றும் மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் செளந்தா்யா சடலமாக மிதந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, செளந்தா்யாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com