கரூா் நகரில் இன்றும், நாளையும் மின்தடை

கரூா் நகரப் பகுதியில் புதன், வியாழக்கிழமைகளில் (ஜூலை 14,15) மின் விநியோகம் இருக்காது.

கரூா் நகரப் பகுதியில் புதன், வியாழக்கிழமைகளில் (ஜூலை 14,15) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில், மழைநீா் வடிகால் கால்வாய்ப் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற உள்ளன.

இதனால் கரூா் கோபாலபுரம், வடக்கு பிரதட்சணம் சாலை, பழைய ஆட்சியரகப் பகுதி,எல்ஐசி அலுவலகச் சாலை, சுற்றுலா மாளிகைப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com