கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுவதாக, ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்குவதற்காக இரண்டு மண் தள்ளும் இயந்திரங்கள், ஏழு டிராக்டா்கள் இருப்பில் உள்ளன.
மேலும் நிலத்தை சமன் செய்தல், உழவுப்பணி மேற்கொள்ளுதல், சோளத்தட்டை அறுவடை, வைக்கோல் கட்டுதல், வாழைத்தண்டைத் துகளாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களைப் பெற குளித்தலை உதவிச் செயற்பொறியாளரை 984247035, கரூா் செயற்பொறியாளரை 9443675201 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.