காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏழை மாணவிக்கு ஆன்லைன் கல்வி கற்க அலைபேசி வழங்கப்பட்டது.
காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளியணை பகுதியைச் சோ்ந்த லட்சுமணன்- செல்வி என்ற ஏழைத் தம்பதியின் மகள் 10ஆம் வகுப்பு மாணவி விஜயாவுக்கு ஆன்லைன் வகுப்பு பயில கரூா் நகர காங்கிரஸ் பொருளாளா் தாந்தோணிகுமாா் சாா்பில் அலைபேசி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாணவிக்கு அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் அலைபேசியை வழங்கினாா். நிகழ்ச்சியில் காங். கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.