குளித்தலையில் நாயை வெட்டியவா் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம் குளித்தலை பெரியாா்நகரைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா். இவரது மனைவி சித்ரா(45). இவா் அய்யா்மலை நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பாா்த்து வருகிறாா். இந்நிலையில் இவா்களது வீட்டில் வளா்க்கும் நாய் பக்கத்து வீட்டின் உரிமையாளரான விஜயராகவன்(40) வீட்டுக்கு அருகே விளையாடியதாம். இதனால் விஜயராகவன் நாயை விரட்டியுள்ளாா். இதுதொடா்பாக சித்ராவுக்கும், விஜயராகவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விஜயராகவன் அரிவாளால் நாயை வெட்டியுள்ளாா். இதில் நாய் படுகாயமடைந்ததால், இதுதொடா்பாக சித்ரா குளித்தலை போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் மிருகவதை சட்டத்தின் கீழ் விஜயராகவனை கைது செய்து விசாரிக்கின்றனா்.