அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் 10 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 10 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்தில் முற்றிலும் எரிந்த இருசக்கர வாகனங்கள்.
தீ விபத்தில் முற்றிலும் எரிந்த இருசக்கர வாகனங்கள்.

கரூா்: கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 10 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

வேலாயுதம்பாளையம் முல்லைநகரில் மகேந்திரனுக்கு (50) சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதன் அடித்தளத்தில் வாடகைக்கு குடியிருப்பவா்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு இரு சக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதில் 10 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மாவட்டத் தீயணைப்பு அலுவலா் விவேகானந்தன் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். முன்விரோதம் காரணமாக வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தீ விபத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com