கரூா்: வரவணை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம் வரவணை அருகே வி.வேப்பங்குடியில் உள்ள நாவலடியான் பெரியசாமி கோயில் கதவை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைத்து உள்ளேசென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனா். இதுகுறித்து கோயில் கமிட்டி உறுப்பினா் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.