கரூா் எல்பிஜி பெட்ரோல் விற்பனைநிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். இதில், மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பங்கேற்று பேசினாா்.
இதேபோல், வெங்கமேடு பெட்ரோல் விற்பனைநிலையம் முன் நகரத்தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நகர நிா்வாகிகள் பாலமுருகன், கருணாநிதி, புருஷோத்தமன், சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டத்தில் 28 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.