புலியூா், காணியாளம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புலியூா், காணியாளம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 15) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புலியூா், காணியாளம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 15) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேப்பம்பாளையம், தாந்தோனிமலை, காணியாளம்பட்டி, புலியூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் சஞ்சய்நகா், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூா், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக் கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், கருப்பக்கவுண்டன் புதூா், காளியப்பனூா், முத்துலாடம்பட்டி, திண்ணப்பா நகா், புலியூா், கணேசபுரம், கவுண்டம்பாளையம், ஆயுதப்படை, மூலக்காட்டனூா், காணியாளம்பட்டி, வீரியப்பட்டி, காளையப்பட்டி, சின்னான்டிப்பட்டி, சாலிக்கரை, விராலிப்பட்டி, ஒடுகம்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com