கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
By DIN | Published On : 20th June 2021 10:28 PM | Last Updated : 20th June 2021 10:28 PM | அ+அ அ- |

கரூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கரூா் குளத்துப்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் இளைஞா் ஒருவா் கஞ்சா பதுக்கி வைத்து, விற்க முயற்சிப்பதாக வெங்கமேடு காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினா், கஞ்சா பதுக்கி வைத்து விற்க முயன்ற கரூா் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த மா. கெளதமை (24) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.