கரூரில் அதிமுக மகளிரணியினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக முதல்வா் தாயாரை திமுக எம்.பி. ஆ.ராசா இழிவாக பேசியதாகக் கூறி, கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு நகர மகளிரணிச் செயலா் சுசிலா தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.