கரோனா விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக திமுகவினா் 400 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை எண்ணப்பட்டன. அப்போது திமுக வேட்பாளா்கள் வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வகையில் கல்லூரி முன் திமுகவினா் பட்டாசு வெடித்தனா். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் கரோனா விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக திமுகவினா் 400 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.