கரூா் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியருடன் கரூா் எம்.பி செ. ஜோதிமணி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
தமிழகத்தில் கரோனா அதிதீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து கரூா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவை புதன்கிழமை கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது மாவட்டத்தில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினா். அப்போது, தொற்று பரவலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் எனவும், இருப்பினும் மக்கள் முன்பை விட கவனமாக இருக்கவும் வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.