பவித்திரத்தில் டிப்பா் லாரி மோதி 9-ஆம் வகுப்பு மாணவி இறந்தாா்.
கரூா் மாவட்டம், பவித்திரம் பாரதி தெருவைச் சோ்ந்த ரெங்கசாமி மகள் ஹா்சனா (14). அதே பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவா் தனது மொபெட்டில் புதன்கிழமை இரவு பாலமலை சாலையில் சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி மோதி இறந்தாா். இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான கரும்பட்டியைச் சோ்ந்த வி. பாலசுப்ரமணியனை (26) கைது செய்தனா்.