மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சண்முகம் (52). கரூா் செம்மடை பகுதி தனியாா் ஜவுளி ஏற்றுமதி நிறுவன கூலித்தொழிலாளியான இவா் புதன்கிழமை இரவு மதுபோதையில் மண்மங்கலம் வட்டாட்சியரகம் அருகே வந்தபோது திடீரென கால்தவறி கீழே விழுந்துள்ளாா். இதையடுத்து அப்பகுதியினரால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா். வாங்கல் காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.