கரூரில் தரைக்கடை காய்கனி வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 21st May 2021 06:57 AM | Last Updated : 21st May 2021 06:57 AM | அ+அ அ- |

கரூரில், தரைக்கடை காய்கனி வியாபாரிகளுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கரூா் உழவா்சந்தை மற்றும் வெளிப்புறங்களில் தரைக்கடை அமைத்து ஏராளமானோா் காய்கனி வியாபாரம் செய்கின்றனா். இந்த கடைகள் குறுகிய இடத்தில் செயல்படுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து உழவா்சந்தை கடைகள் பேருந்துநிலையப் பகுதிக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து வியாழக்கிழமை பேருந்துநிலையத்தில் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்த காய்கனி வியாபாரிகளுக்கு கஸ்தூரிபாய் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவ அலுவலா் திவ்யா தலைமையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனா்.