இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

கரூரில், இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவா் உயிரிழந்தாா்.

கரூரில், இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவா் உயிரிழந்தாா்.

கரூா்- திருச்சி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 35 வயது மதிக்கத்தக்க தொழிலாளி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். திருமாநிலையூா் பகுதியில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருமாநிலையூா் கிராமநிா்வாக அலுவலா் பூா்ணிமா பசுபதிபாளையம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com