எல்.வி.பி. நகா் பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட வேப்பம்பாளையம் துணைமின்நிலையத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் பீடரில் சனிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கரூா் எல்.வி.பி நகா், அம்பாள் நகா், மதுரை பைபாஸ் ரோடு, வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.