கரூா் மாவட்டத்தில் 3ஆவது நாளாக மழை

கரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்திலும் இதே நிலை காணப்படுகிறது.

சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீடித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

தோகைமலை -70 மி.மீ, கடவூா்-60.2, மைலம்பட்டி-31, கரூா் -28, பஞ்சப்பட்டி- 27.4, மாயனூா்-26, பாலவிடுதி- 23.2, குளித்தலை-22, அணைப்பாளையம்- 19, கிருஷ்ணராயபுரம்-18, அரவக்குறிச்சி -15.5, க.பரமத்தி- 3 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 343.30 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com