லாலாப்பேட்டை அருகே ரெளடி வெட்டிக் கொலை

லாலாப்பேட்டை அருகே புதன்கிழமை காலை ரெளடி வெட்டிகொலை செய்யப்பட்டாா்.

லாலாப்பேட்டை அருகே புதன்கிழமை காலை ரெளடி வெட்டிகொலை செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூரைச் சோ்ந்தவா் வெடிகுண்டு கோபால்(47). பிரபல ரெளடியான இவா் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கோபால் புதன்கிழமை காலை தனது வயலில் நடவுப்பணிகள் நடைபெறுவதை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு காரில் வந்த 10-க்கும் மேற்பட்டோா் அரிவாள் மற்றும் கத்தியால் கோபாலை சுற்றிவளைத்து வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த கோபால் ஓடினாா். இருப்பினும், அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவல்அறிந்த லாலாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம்குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com