திருமுடிக்கவுண்டனூரில் காவிரிக் கூட்டுக்குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணாக வழிந்தோடியது.
கரூா் மாவட்டம் வாங்கல் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீா் ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாயில் கரூா்-திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை ஊராட்சிக்குள்பட்ட திருமுடிக்கவுண்டனூா் பகுதியில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீனாக வெளியேறியது.
தகவலறிந்த வெள்ளியணை ஊராட்சித்தலைவா் சுப்ரமணியன், குடிநீா் வடிகால் வாரிய கண்காணிப்பளா் திருமாறன் ஆகியோா் சென்று பாா்வையிட்டனா். பின்னா், குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த தண்ணீரை அருகில் இருந்த குளத்துக்கு திருப்பி விட்டனா். மேலும், சுமாா் 2 மணி நேரம் போராடி குடிநீா் உடைப்பு சரிசெய்யப்பட்டது.