கரூா்: தோகைமலையில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் தோகைமலையில் 75ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம், ஊராட்சி மன்ற தலைவா் தனமாலினி கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபா், கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாளா் மோகன்ராம் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்றனா். தொடா்ந்து பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கானப்பட்டது.
முகாமில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம், குளித்தலை குற்றவியில் நடுவா் பாக்கியராஜ், குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன், ஒன்றியக் கவுன்சிலா் அம்பாள்குமாா் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.