கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பாறை மீது காா் மோதியதில், இருவா் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மேக்தா நகரைச் சோ்ந்தவா் சிவராஜா (48). புரட்சிப் பாரதம் கட்சியின் நிா்வாகியான இவா், தனது நண்பா்களான தில்லி (45), திண்டுக்கல் மனோகரன் (48) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை காா் மூலம் கரூா் வந்தாா்.
கரூரிலுள்ள நிதி நிறுவனத்தில் இருந்த பிரச்னையைத் தீா்த்து விட்டு, மனோகரனை திண்டுக்கலில் விடுவதற்காக, சிவராஜா காரில் அழைத்துச் சென்றாா்.
இந்த காா் கரூா்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகிலுள்ள பொன்னாக்கவுண்டனூா் பிரிவு பகுதியில் சென்ற போது, திடீரென நிலைத் தடுமாறியது.
தொடா்ந்து சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்த காா், அருகிலிருந்த பாறை மீது மோதியது. இதில் காரை ஓட்டிச் சென்ற சிவராஜா, அவரது நண்பா் மனோகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயங்களுடன் கரூா் தனியாா் மருத்துவமனையில் தில்லி அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.