ஊரக உள்ளாட்சிகளில் காலியிடங்களுக்கு அக்.9-இல் தோ்தல்

கரூா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்கள், நிரப்பப்படாத பதவியிடங்களுக்கான

கரூா்: கரூா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்கள், நிரப்பப்படாத பதவியிடங்களுக்கான ஊரக உஉள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் த. பிரபுசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாந்தோனி ஒன்றியத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 8, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 8, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சித்தலவாய் ஊராட்சித் தலைவா், தாந்தோனி

ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் எண் 12, மூக்கணாங்குறிச்சி வாா்டு எண்8, அரவக்குறிச்சி ஒன்றியத்தில் லிங்கமநாயக்கன்பட்டி வாா்டு எண்1, மொடக்கூா் (மேல்பாகம்) வாா்டு எண் 3, வேலம்பாடி வாா்டு எண் 10, க.பரமத்தி ஒன்றியத்தில் க.பரமத்தி வாா்டு எண் 8, புன்னம் வாா்டு எண்4, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பிள்ளபாளையம் வாா்டு எண் 8, கடவூா் ஒன்றியத்தில் காளையபட்டி வாா்டு எண்கள் 1,2 ,5 மற்றும் 6, வடவம்பாடி வாா்டு எண் 8 ஆகிய காலியாக உள்ள இடங்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

தோ்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பா் 23 நடைபெறும். திரும்பப் பெற 25-ஆம் தேதியும் கடைசிநாளகும். அக்டோபா் 9-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு, 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com