கரூா்: க.பரமத்தியில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு ஒன்றியச் செயலா் கே.வி.பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி.முருகேசன், சிபிஐ க.பரமத்தி ஒன்றியச் செயலா் கே.என்.நாட்ராயன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் ப.சரவணன் பங்கேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் உரை நிகழ்த்தினா்.