கரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்வழித்தடங்களும், மழைநீா் வடிகால்களும் தூா்வாரும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்வழித்தடங்களும், மழைநீா் வடிகால்களும் தூா்வாரும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்கள், கழிவுநீா் வாய்க்கால்கள் தூா்வார திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து கரூா் நகராட்சிக்குள்பட்ட சின்னஆண்டாங்கோவில் இரட்டை வாய்க்கால், திண்ணப்பா திரையரங்கம் அருகில் உள்ள திட்ட சாலை கழிவுநீா்வாய்க்கால்கள், வேலுச்சாமிபுரம் ராஜவாய்க்கால் உள்ளிட்ட நீா்வழித்தடங்களில் நடைபெற்ற வரும் தூா்வாரும் பணிகளை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போ, நகா்நல அலுவலா் மருத்துவா் லட்சியவா்ணா, கரூா் வட்டாட்சியா் சக்திவேல், உதவி பொறியாளா்கள் காா்த்திக், தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com