கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது.
அதன்படி வியாழக்கிழமை நள்ளிரவு ஆங்காங்கே மழை பெய்த நிலையில், அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 68.2 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்)- அரவக்குறிச்சி-68.2, குளித்தலை-2, தோகைமலை-25, கிருஷ்ணராயபுரம்-2.4, மாயனூா்-2, பஞ்சப்பட்டி-16.8 என மொத்தம் 116.40 மி.மீ. மழை பெய்தது.