மாட்டுவண்டி மூலம் குளத்தில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டியருகே எழுதிக்கோன்பட்டியிலுள்ள குளத்திற்குள் ஒருவா் வியாழக்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிந்தாமணிப்பட்டி போலீஸாா் அங்குச் சென்று அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த கடவூா் அடுத்த சோ்வைக்காரனூரைச் சோ்ந்த முத்துசாமியை (47) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்தனா்.