டாஸ்மாக் கண்காணிப்பாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக நிதிநிறுவன அதிபரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், நங்கவரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன்(45). இவா் காவல்காரன்பட்டி டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா். இவரது தந்தை அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பவா் நடத்திவரும் நிதிநிறுவனத்தில் ரூ.12.99 லட்சம் வைப்புத்தொகை செலுத்தியுள்ளாா். இதனிடையே பாலசுப்ரமணியனின் தந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலசுப்ரமணியன் தனது தந்தையின் டெபாசிட் தொகையை திரும்பித்தருமாறு கேட்டுள்ளாா்.
இதற்காக சரவணன் மூன்று காசோலை கொடுத்தாராம். இதில், ஒரு காசோலையில் ரூ.2 லட்சம் மட்டும் எடுத்துள்ளாா். மற்ற காசோலைகள் செல்லாதவையாக ஆனதால் ஏமாற்றம் அடைந்த பாலசுப்ரமணியன் வெள்ளிக்கிழமை கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனா்.