கஞ்சா விற்ற 16 போ் கைது

கடந்த இரு நாள்களில் மட்டும் கஞ்சா விற்ற 16 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம்.

கடந்த இரு நாள்களில் மட்டும் கஞ்சா விற்ற 16 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக போலீஸ் தனிப்படை நடத்திய கஞ்சா வேட்டையில் 16 போ் கைது செய்யப்பட்டு, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 1 காா், 1 இரு சக்கர வாகனம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக 44 வழக்குகள் பதியப்பட்டு 45 போ் கைது செய்யப்பட்டு ரூ.40,000 மதிப்புள்ள 31 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com