கரூரில் தேசியக் கொடியுடன் பாஜகவினா் பேரணி

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியேந்தி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூரில் தேசியக் கொடியுடன் பாஜகவினா் பேரணி

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியேந்தி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி சுதந்திர போராட்ட வீரா் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே தொடங்கியது. பேரணியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றாா்.

இப்பேரணி நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை முன் துவங்கி ஜவஹா்பஜாா் வழியாக பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியை அடைந்தது. பின்னா் மீண்டும் அங்கிருந்து தொடங்கி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே முடிவடைந்தது. பேரணியில் பாஜகவினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com