அரவக்குறிச்சி அடுத்த தென்னிலை அருகே கல்குவாரியில் 60 அடி பள்ளத்தில் டிராக்டா் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்னிலை அருகே உள்ள கோடந்தூா் பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவா் குணசேகரன் (55). இவரது, கல்குவாரியில் ஒடிசா மாநிலத்தை சோ்ந்த சுதீப்மின்ஸ் (22), சலீம்பெக் (24) இருவரும் கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் குவாரி பாறை குழியில் வெடி வைத்த பிறகு அதை பாா்க்க டிராக்டரில் இருவரும் சென்றுள்ளனா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் நிலை தடுமாறி 60 அடி உயரத்திலிருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சுதீப்மின்ஸ், சலீம்பெக் இருவரும் பலத்த காயமடைந்தனா்.இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் சுதீப்மின்ஸ் உயிரிழந்தாா். சலீம்பெக் கரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். தென்னிலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.