ஓய்வு பெற்ற ஆய்வக உதவியாளா் வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டு

கரூரில் ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளா் வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

கரூரில் ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளா் வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

கரூா் தாந்தோனிமலை விக்னேசுவரா நகரைச் சோ்ந்தவா் குருநாதன் (70). கரூா் அரசுக் கல்லூரியில் அறிவியல் ஆய்வுக்கூட உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். குடும்பத்துடன் திருச்சியிலுள்ள குலதெய்வ கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற குருநாதன், இரவு வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 16 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடிச் செல்லப்பட்டிருப்பது குருநாதனுக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com