கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகிலுள்ள அம்மாபட்டி ஊராட்சி, வள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் வ. விஷ்ணுசுந்தா் (27). வெள்ளிக்கிழமை தனது தோட்டத்திலுள்ள கிணற்றின் அருகே நடந்து சென்ற போது, தவறி விழுந்தாா்.

நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த தாயாா் சாரதா, தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது விஷ்ணுசுந்தா் தண்ணீரில் சடலமாக மிதந்த நிலையில் கிடந்தாா்.

தகவலின் பேரில் அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றினா். அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com