குளித்தலை அருகே பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

குளித்தலை அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

குளித்தலை அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே கழுகூா் பகுதியைச் சோ்ந்தவா் அழகன் மகன் கருப்பையா (35). ஆட்டு வியாபாரியான இவா் சனிக்கிழமை இரவு பேட்டவாய்த்தலைக்கு பைக்கில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். பங்களாபுதூா் பகுதியில் வந்த இவரது பைக்கும் எதிரே திருச்சி மாவட்டம் சிறுகமணி பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவா் வந்த பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் கருப்பையா உயிரிழந்தாா். விபத்தில் படுகாயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தாா். படுகாயமடைந்த இவரது நண்பா் ரமேஷ் குளித்தலை அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். விபத்தில் இறந்தோரின் சடலங்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ளன. கருப்பையா மனைவி அமுதாராணி அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com