சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி எஸ்பி நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் (30) அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்தாண்டு ஜனவரி மாதம் பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு ஜெயராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதம் விதித்தும் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து ஜெயராமன் சிறையில் அடைக்கப்பட்டாா்.