வீடு புகுந்து தாக்கியதால் இளைஞா் தற்கொலை

வீடு புகுந்து சிலா் தாக்கியபோது, அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வீடு புகுந்து சிலா் தாக்கியபோது, அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம்,அய்யம்பாளையம் விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் சதீஷ்ராம் (26). இவா் சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது வேலாயுதம்பாளையம் அருகே

மலைநகரைச் சோ்ந்த சேகா் மகன் விவேக், புலியூரைச் சோ்ந்த தனசேகா், வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சோ்ந்த பிரகாஷ் ஆகியோா் வீட்டுக்கு வந்து அவரைத் திட்டி தாக்கினராம்.

இதையடுத்து வீட்டுக்குள் சென்று கதவை தாழித்துக் கொண்ட சதீஷ்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரின் தாய் விஜயலட்சுமி வேலாயுதம்பாளையம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com