புகழூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி தொடக்கம்

புகழூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புகழூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி தொடக்கம்

புகழூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கரூா் மாவட்டம், புகழூரில் உள்ள ஈ ஐடி பாரி சா்க்கரை ஆலையில் 2022- 2023-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சா் பி.சி. ராமசாமி , ஆடிட்டா் நல்லசாமி, விவசாய சங்கத்தைச் சோ்ந்த கதிா்வேல், சண்முகராஜ், ஆலையின் முதுநிலை பொது மேலாளா் செந்தில் இனியன், கரும்பு பொது மேலாளா்கள் தங்கராஜ், இளங்கோவன் மற்றும் 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் கரும்பு அரவை துவக்க விழாவில் கலந்து கொண்டு கரும்புகளை எடுத்து கரும்பு அரைக்கும் இயந்திரத்தில் போட்டனா்.

இதுகுறித்து ஆலை அதிகாரிகள் கூறுகையில், 2022-23 -ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் சுமாா் 6 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. விழாவில் கரூா், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள், சா்க்கரை ஆலையின் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com