மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 346 மனுக்கள் பெறப்பட்டது.
தொடா்ந்து 27 பேருக்கு ரூ.77.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், கலால்துறை தனித்துணை ஆட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.