சதுரங்கப் போட்டிமாண, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் திங்கள்கிழமை பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கினாா்.

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் திங்கள்கிழமை பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கினாா்.

கரூா் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் மாணவ, மாணவிகள் பூவிதா, ஜனனி அம்ரிதா, பத்ரிநாத், திகழ், ஹேமஸ்ரீ ஆகியோா் வெற்றி பெற்றனா். இதில், பூவிதா ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தோ்வு பெற்றாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் திங்கள்கிழமை பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com