பங்குச் சந்தை வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் திங்கள்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் தாந்தோணிமலை கோல்டன் நகரைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (34). இவா், பங்குச்சந்தை வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், பங்கு வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த தமிழ்வாணன் வீட்டில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.