கரூரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூரில், எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூரில், எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முகமதுஅலி ஜின்னா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பேச்சாளா் மதுரை ஜியாவூதின் பங்கேற்றாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வீரமணி, தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி, சாமானிய மக்கள் கட்சியின் வழக்குரைஞா் குணசேகரன், தென்னரசு உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும், பாபா் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபா் மசூதி கட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பக்ரூத்தீன் தலைமை வகித்தாா். கரூா் மாவட்டத்தில் வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டு மீண்டும் வக்பு வாரிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com