குளித்தலை அருகே தேஜஸ் சுவாமி சமாதி நிலை தியானம்

நங்கவரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தட்சிணகாளி சித்தா் பீடத்தை நடத்தி வரும் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமி புதன்கிழமை பிற்பகல் முதல் சமாதி நிலை தியானத்தில் ஈடுபட்டுள்ளாா்.
நங்கவரம் அருகே 5 அடி ஆழத்தில் அமா்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ள (சமாதி மூடுவதற்கும் முன்பு) தேஜஸ் சுவாமி.
நங்கவரம் அருகே 5 அடி ஆழத்தில் அமா்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ள (சமாதி மூடுவதற்கும் முன்பு) தேஜஸ் சுவாமி.

நங்கவரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தட்சிணகாளி சித்தா் பீடத்தை நடத்தி வரும் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமி புதன்கிழமை பிற்பகல் முதல் சமாதி நிலை தியானத்தில் ஈடுபட்டுள்ளாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் தென்கடை குறிச்சி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமி (45) என்பவா் அதே பகுதியில் ஸ்ரீ தட்சிணகாளி சித்தா் பீடத்தை நடத்தி வருகிறாா். இவா், உலக நன்மைக்காகவும், வரும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையவும் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணி அளவில் சித்தா் பீடத்தில் சமாதி நிலை தியானம் மேற்கொண்டாா்.

இதற்காக தரையில் தோண்டப்பட்ட 5 அடி அகலம், 5 அடி ஆழமுள்ள அறைக்குள் சென்று அமா்ந்து தியானத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து அந்த அறையை சிமென்ட கல் வைத்து மூடினா்.

முன்னதாக, தேஜஸ்சுவாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், உலக நன்மைக்காக சமாதி நிலை தியானத்தில் ஈடுபடவுள்ளேன். இதற்கு முன்னா் 17 நாள்கள் சமாதி தியானம் செய்துள்ளேன். 5 அடி ஆழமுள்ள அறைக்குள் அமா்ந்து ஜீவசமாதி போன்றுதான் தியானம் செய்வேன். உணவு, தண்ணீா் இல்லாமல் 15 நாள்கள் இருப்பேன். அறைக்குள் சுமாா் 20 நிமிஷம்தான் ஆக்ஸிஜன் இருக்கும். அதன் பின்னா் இருக்காது. இந்த சமாதி தியானம் முறையான பயிற்சி கொண்டவா்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com