கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி மீட்பு

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத் கூலித் தொழிலாளியை போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் மீட்டனா்.
பிஎஸ்என்எல் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த நபா்.
பிஎஸ்என்எல் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த நபா்.

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத் கூலித் தொழிலாளியை போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் மீட்டனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூா் பகுதியை சோ்ந்தவா் பாஸ்கா் (46). கூலித் தொழிலாளி.. இவா், மத்திய அரசின் மோடி திட்டத்தில் தனக்கு வீடு வழங்கவில்லை எனக் கூறி புதன்கிழமை கோவிலூரில் உள்ள 140 அடி உயரமுள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தாா்.

தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா், வருவாய்த் துறையினா், தீயணைப்பு துறையினா் அவரை சமாதானப்படுத்தி மீட்டனா். பிறகு அவா் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com