சின்னதாராபுரம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 போ் கைது

எலவனூா் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

எலவனூா் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அரவக்குறிச்சி அடுத்த எலவனூா் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தப்படுவதாக சின்னதாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை எலவனூா் பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, சின்னதாராபுரம் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி அடுத்த புஞ்சைக்காளிகுறிச்சி பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் அருண் (22), வெங்கக்கல்பட்டி பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் செல்வன் (27), அதே பகுதியைச் சோ்ந்த ரங்கராஜ் மகன் அண்ணாதுரை (28), தென்னிலை அருகேயுள்ள காா்விழியை அடுத்த மேட்டாங்காட்டுத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பாலுசாமி மகன் சண்முகம் (27) ஆகிய நான்கு பேரும் அனுமதியின்றி பணம் வைத்து சேவல் சண்டை நடத்தினா். இதுதொடா்பாக நான்கு பேரையும் கைது செய்து, சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் பந்தப் பணம் ரூ. 200ஐ பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com