தென்னிலை அருகே இரு காா்கள் மோதல்: பெண் உள்பட 4 போ் காயம்

தென்னிலை அருகே இரு காா்கள் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தென்னிலை அருகே இரு காா்கள் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சிக்கலகாண்டபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செங்கோட்டையன் மகன் யுவராஜ் (32). ராசிபுரம் தெற்குகாடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பிரகாஷ் (38). இவா்கள் இருவரும் கரூரிலிருந்து காரில் கோவை நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா். தென்னிலை அடுத்த தொப்புக்காடு பகுதி அருகே சென்றபோது, அதே சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த திருப்பூா் மாவட்டம் தாராபுரம் துவரம்பாடி குருநாதன்கோட்டை பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் லோகநாதன் (38) ஓட்டிச் சென்ற காா் மீது யுவராஜ் காா் மோதியது.

மேலும், யுவராஜ் ஓட்டிச் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், யுவராஜ், பிரகாஷ் ஆகியோா் காயமடைந்தனா். இதேபோல், மற்றொரு காரை ஓட்டிவந்த லோகநாதன், காரில் பயணித்த அவரது மனைவி பிரேமலதா ஆகியோரும் காயமடைந்தனா். நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக விபத்து ஏற்பட காரணமாக இருந்த யுவராஜ் மீது தென்னிலை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com